Monday, 13 May 2019

வெளியே செல்லும் போது கால் இடறினால் உள்ளே வந்து நீர் அருந்திச் செல்லவது இதற்கு தான்.!!

நம்மில் பலருக்கும் சகுனம் பார்க்கும் பழக்கம் இருக்கிறது.


சகுனம் என்பது நடைபெறவுள்ளநிகழ்விற்கான அறிகுறி என்று சொல்லலாம்.வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கைகால் இடறினாலோ, வாயிற்படியில்தலையில் இடித்துக் கொண்டாலோ அதனைசகுனத் தடையாகச் சொல்வார்கள். இதுபோன்ற சகுனங்களை மூட நம்பிக்கை என்றுஒதுக்க முடியாது. உண்மை நிலையையோசித்துப் பாருங்கள். வெளியே ஒருவேலையாக செல்லும் போது கால் இடறுவது, தலையில் இடித்துக் கொள்வது போன்றவைவெளியே செல்பவரது கவனக்குறைவால்தான் ஏற்ப்படுகிறது.

அதே கவனக்குறைவுடன் சென்றால்அவரால் அந்த வேலையை சரிவர செய்யஇயலாது. கவனக்குறைவினை சரிசெய்வதற்காகவும், மனதளவில் அவர்தெளிவாக இருக்கவேண்டும்என்பதற்காகவும் வீட்டிற்குள் திரும்பஅழைத்து அமர செய்து நீரை அருந்துங்கள்என்கிறார்கள். குடிக்கின்ற நீர் மனதைசாந்தப்படுத்தும்.   தண்ணீர் பருகிவிட்டுசெல்லும் பொழுது தன் உடம்பில் உள்ளகுறைகள் காணாமல் போகின்றன. இதனால் வெளியில் சென்று செய்து முடிக்கவேண்டிய பணிகள் தடையேதுமின்றிநடக்கும்.
தடைகள் உண்டாகும் போது தான் உள்ளேவந்து அமர்ந்து நீர் அருந்திச்செல்லவேண்டும் என்பதில்லை. வெளியில்வேலையாகக் கிளம்பும் போதேமனைவியின் கையாலோ, தாயாரின் கையாலோ, அல்லது அந்த வீட்டில் உள்ளசுமங்கலிப் பெண்ணின் கையாலோ ஒருசொம்பு தண்ணீரை வாங்கிக் குடித்து விட்டுசெல்லலாம். அவ்வாறு செய்வதினால் இதுபோன்ற சகுனத்தடை உண்டாகாது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment