அர்த்தமுள்ள பல அறிவியல் பின் புலன்களைக் கொண்டே நம் முன்னோர்களால் மலை கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும் இடங்களில் மலை கோவில்கள் முதன்மையானவை. மனிதனுக்கு தேவையான மருத்துவங்கள் இயற்கையிலேயே இருக்கின்றன அதில் மலை கோவில்கள் தரும் அற்புத பெறும் பங்கை இங்கே காணலாம்.
சுவாமி ஐயப்பன், பழனி முருகன், திருப்பதி வெங்கடாஜலபதி போன்றமலைக்கோயில்களுக்கு சென்றுவரஏராளமான மக்கள் ஆர்வம்காட்டுகிறார்கள். ஊருக்குள்வைக்காமல் ஒவ்வொரு மலையின்மீதும் ஏன் கோயில்களை கட்டினார்கள்என்பதற்கு ஆரோக்கியமான காரணம்இருக்கிறது.
ஆம். அடிவாரத்தில் இருந்து நடந்துமலையேற வேண்டும் என்பதற்காக, விநாயகர் கோயிலை அடிவாரத்தில்கட்டினர். மலைப்பாதையின் இருபுறமும்வனம் போல திறந்தவெளியாகஇருக்கும். அங்குள்ள மூலிகைகள் மீதுபட்டு வரும் காற்று மருத்துவகுணம்கொண்டது. மேலும்மலைப்பாதையிலுள்ள ஊற்று, சுனைநீரில் மருத்துவகுணம்நிறைந்திருக்கும். அது உடலுக்கும்உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி தரும். மேடு பள்ளங்களில் ஏறிஇறங்கும்போது, தசைகள்வலுவடையும். தேவையற்ற கொழுப்பு, சதை கரைந்து போகும். காலுக்குசிறந்த பயிற்சி ஏற்படும் வியர்வைவெளியேறும். நல்ல பசி உண்டாகும்.
திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம்போன்ற தலங்களில் மலையைச் சுற்றிவந்து வழிபடுவதும் இதற்காகத் தான். கிரிவலம் வரும்போது விளையாட்டாகப்பேசிக் கொண்டு சுற்றக் கூடாது. இறைநினைவுடன் மட்டும் சுற்ற வேண்டும். இதனால் தியானத்திற்கு ஈடாக மனம்ஒருநிலைப்படும். மனம் அடங்கினால்உடலுக்கு நல்லது. இதன் அடிப்படையில்தான் மலையில் கோயில்கள்கட்டப்பட்டன. தினமும் ஒரு முறைமலையேறி இறங்கினால் உடல்ஆரோக்கியத்துக்கு குறையேஇருக்காது என்பதைத்தான் நம்முன்னோர்கள் மலை மீது கோயில் கட்டிசொல்லியிருக்கிறார்கள்...

No comments:
Post a Comment