Monday, 13 May 2019

கோவில்களில் சிவலிங்கத்திற்குப் பின்னால் ஐந்து தலை நாகம் வைத்து அலங்கரிப்பது ஏன் தெரியுமா?

ஐந்து தலை நாகம் என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலங்களைக் குறிக்கும்.


இந்த ஐம்புலன்களும் பாம்பு போலவிஷப்பூச்சிகளே. மாயை எனும் துன்பத்தைத்தருகின்ற இந்த ஐம்புலன்களையும் அடக்கி,அவற்றை எவனொருவன் தன் கட்டுக்குள்வைத்திருக்கிறானோ அவனேஞானியாவான். ஞானசொரூபன் இறைவன்என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இந்தநாகாபரணத்தினை இறைவனுக்குஅலங்காரமாக வைத்து அழகுபார்க்கிறார்கள்.

சிவபெருமான் மட்டுமல்ல, மகாவிஷ்ணுஐந்து தலை நாகமாக ஆதிசேஷனைபடுக்கையாக மாற்றி அதன் மேல்சயனித்திருப்பார்.  கருமாரியம்மன்தலையில் மகுடமாக நாகம் இருக்கிறது. விநாயகப் பெருமானுக்கும் வயிற்றில் கயிறுபோல சுற்றி முடி போட்ட நிலையில்நாகத்தினை வடிவமைத்திருப்பார்கள்.அனைத்து தெய்வங்களின்திருமேனியையும் இந்த நாகம்அலங்கரித்திருக்கும்.

விஷத்தன்மை கொண்ட ஐந்துபுலன்களையும் அடக்கி ஞானத்தினை அடைய வேண்டுமென்றால் அதற்குதெய்வத்தின் அருள் தேவை என்பதைஉணர்த்தவே நாகத்தினை இறைவனோடுதொடர்புபடுத்தி வைத்திருக்கிறார்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment