Sunday, 12 May 2019

விதியை மதியால் மட்டும் அல்ல இப்படியும் வெல்லலாம்! சூட்சமத்தை தெரிஞ்சிக்கங்க.!!

மனிதன் தன் வாழ்நாளில் மூன்று வகையான கர்ம வினைகளை பெற்று அனுபவிக்கிறான். அவை,


1)சஞ்சித கர்மம்

2)பிராப்த கர்மம்
3)ஆகாமிய கர்மம்
இதில் ”சஞ்சித_கர்மம்” என்பது நம் கருஉருவாகும் போதே உடன் உருவாவது,அதாவது முன்ஜென்மங்களில் நாம் செய்தபாவ புண்ணியத்தின் வித்தாக இந்தபிறவியில் நம்மை பற்றிக்கொள்ளும் கர்மவினையாகும்.
”பிராப்த_கர்மா” என்பது நாம் இந்தபிறவியில் உடலெடுத்து வாழும் காலத்தில்நம் ஜீவனத்துக்காக நாம் செய்யும்தொழிலின் வாயிலாக நாம் பிறருக்குசெய்யும் நன்மை தீமைகளால் உண்டாகும்கர்ம வினை, இந்த கர்மாவால் வரும்பலனையும் நாம் இந்த பிறவிலேயேஅனுபவிக்க வேண்டும்,
”ஆகாமிய_கர்மா” என்பது இந்த பிறவியில்நாம் வாழும் காலத்தில் நம் ஆசைகளால்பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால்வருவது. இவ்விதமாக மூன்று வகையானகர்மாக்கள் நம்மை சூழ்ந்துள்ளன.
இந்த கர்மவினைகளில் இருந்து யாரும்தப்பிவிட இயலாது. அனைவரும்கர்மவினையில் சிக்கி உழன்றாகவேண்டியது தான்,
நாம் வாழ்வில் எதிர்கொள்ளும்பிரச்சனைகள், குழப்பங்கள், இன்பங்கள்,அனைத்தும் மேலே குறிப்பிட்ட கர்மவினைகளின் சாராம்சம் ஆகும்.அப்படியென்றால் ,நம் கர்ம வினைகள் நீங்கநாம் யாரை பற்ற வேண்டும்?
இறைவனுக்கு ஐந்து விதமான சேவைகள்செய்வதின் மூலம் நம் பாவங்களை நாம்போக்கிக் கொள்ள முடியும்.
1.யாதனம் - கோயில் கட்டுதல், நந்தவனம்அமைத்தல், கோயில் திருப்பணிகள்செய்தல்.
2.சிரவணம் - இறைவனின் பெருமைகளைஆன்மீகம் அறிந்தவர்களின் மூலமாககேட்டல்.
3. கீர்த்தனம் - இறைவனை இசை கருவிகள்கொண்டு பாடி ஆடி மகிழ்வித்தல்.
4. பூஜார்தனம் - அபிஷேகம் செய்தல்,அலங்காரம் செய்தல், அர்ச்சனை செய்தல்,நைவேத்தியம் படைத்து பூஜை செய்தல்.
5. ஸ்துதி - இறைவன் நாமத்தை புகழ்ந்துபாடுதல்.
இந்த ஐந்த விதமான சேவைகளை நாம்செய்து வர, நம் கர்ம வினைகளால் நாம்அனுபவிக்கும் துன்பங்கள் மாறி இன்பங்கள்நல்கும்
“வாழ்தலே வழிபாடு”“ வழிபாடே வாழ்தல்”

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment