Tuesday, 2 October 2018

கிரிவலத்தால் கிடைக்கும் குருப்பெயர்ச்சி நற்பலன்.!!

தேவர்களின் குரு ‘பிரகஸ்பதி’ எனும் வியாழ பகவான் ஆவார். குருப்பெயர்ச்சி காலங்களில் திருவண்ணாமலையை கிரிவலம் வந்து வழிபடுவது மிகவும் சிறப்பாக சொல்லப்படுகிறது.

தேவர்களின் குரு ‘பிரகஸ்பதி’ எனும் வியாழ பகவான் ஆவார். நவக்கிரகங்களில் பூரண சுப கிரகமாக போற்றப்படுபவர் இவர். ‘குருவருள் இருந்தால் திருவருள் உண்டாகும்' என்பதும், ‘குரு பார்க்க கோடி நன்மை' என்பதும் குரு பகவானை சிறப்பித்து கூறும் பழமொழிகள். பொதுவாக குரு இருக்கும் இடத்தைவிட அதன் பார்வை பதியும் இடங்களே சிறப்பான பலன்களைப் பெறுவதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. ஜாதகத்தில் ஒருவருக்கு ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் எந்த தோஷங்கள் ஏற்பட்டிருந்தாலும், குரு பார்வ பட்டால் அந்த தோஷங்கள் விலகும் என்றும் சொல்லப்படுகிறது.

குரு பகவான், ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைவார். ஜாதகங்களில் குரு சிறப்பாக அமைந்தால் ஒருவருக்கு குடும்ப வாழ்க்கை, உயர் பதவி, கல்வி, ஞானம், வீடு மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்பு, செல்வசெழிப்பு முதலியன சிறப்பாக அமையும். திருமணப் பேறு, புத்திரபாக்கியம் உண்டாகும்.

ஜாதகத்தில் குரு பார்வை சரி இல்லாதவர்களுக்கு பெரியோர் சாபம், மறதி, விஷப் பூச்சிகளால் பாதிப்பு, காது மற்றும் குடல் சம்பந்தமான நோய்கள், பணத்தட்டுப்பாடு, பேச்சு சம்பந்தமான பிரச்சினைகள், கணவன்- மனைவி இடையே கருத்துவேறுபாடு உண்டாகும் என்றும் சொல்லப்படுகிறது. இப்படி துன்பத்தில் தவிப்பவர்கள் குருபகவானை வழிபட்டால் அந்த பாதிப்புகள் குறையும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பழமையான சிவாலயங்களில் உள்ள அறுபத்து மூன்று நாயன்மார்கள் வழிபாடு, குருப்பெயர்ச்சி சமயத்தில் பக்தர்களுக்கு நற்பலன்களை அள்ளித் தருவதாக அமைந்துள்ளது.

குரு பகவான் பரிகாரத் த‌லங்களாக திருச்செந்தூர், திருஆலங்குடி, பட்டமங்கலம், முறப்பநாடு, மதுரை குருவித்துறை, சென்னை திருவலிதாயம், தேவூர், தென்குடி திட்டை, சுசீந்திரம், உத்தமர்கோவில், தக்கோலம், கோவிந்தவாடி என பல திருத்தலங்கள் கூறப்பட்டாலும், குருப் பெயர்ச்சி காலங்களில் திருவண்ணாமலையை கிரிவலம் வந்து வழிபடுவது மிகவும் சிறப்பாக சொல்லப்படுகிறது.

ரமண மகரிஷியை அவரது அடியவர் ஒருவர், திருக்கயிலாய யாத்திரை செய்ய அழைத்தார். உடனே மகரிஷி சிரித்துக்கொண்டே ஒன்றும் தெரியாதவர் போல, ‘அங்கே அப்படி என்ன விசேஷம்?' என்றார்.

‘திருக்கயிலாய மலை, சிவன் வசிக்கும் பூமி. சிவபெருமான், பூதகணங்கள் சூழவும் ரிஷிகள் சூழவும் இருக்கும் இடம்’ என்று ரமணரிடம் பதிலுரைத்தார் அந்த அன்பர்.

அதற்கு ரமணர், ‘அன்பனே! கயிலாயம் சிவன் வசிக்கும் தலம். ஆனால் திருவண்ணாமலை என்பதே சிவன் தான். சிவபெருமான் இங்கே இருக்க, அவரின் வீட்டை போய் பார்த்து வருவானேன்?' எனக் கூறினார்.

உண்மையை உணர்ந்த அந்த அன்பரும் திருக்கயிலாய யாத்திரையை விடுத்து, திருவண்ணாமலையை கிரிவலம் வந்து தொழுதார்.

ஆம்.. இங்கு மலையே சிவபெருமான் தான்.

‘செங்கணானும் பிரம்மனும் தம்முள்ளே
எங்கும் தேடி திரிந்தவர் கான்கிலார்
இங்குற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடை புண்ணிய மூர்த்தியே’ என்ற திருநாவுக்கரசரின் திருமுறைப்பதிகமே திருவண்ணாமலையின் வரலாற்றை விளக்கிடும்.

ஒருமுறை விஷ்ணுவும், பிரம்மாவும் தங்களில் யார் பெரியவர் என்று வாதிடத் தொடங்கினர். சுவாரசியமாக ஆரம்பித்த வாதம், அனல் தெறிக்க இறுதியில் திருக்கயிலை நாதனான சிவபெருமானிடம் வந்து நின்றனர். கையில் அனல் ஏந்தி, நெற்றிக்கண்ணில் அனலோடு தகதகக்கும் பரம்பொருள் சிவபெருமான், ‘எமது அடியையும், முடியையும் யார் கண்டு வருகிறீர்களோ அவர்களே பெரியவர்' என்று கூறினார்.

அத்தோடு இருவரின் நடுவிலும் பெரும் தூண் போன்ற அருட்பெரும் ஜோதிப் பிழம்பாக எழுந்தருளினார். உடனே ஈசனின் அடியைத் தேடி பன்றி உருக்கொண்டு விஷ்ணுவும், அன்னப் பறவை உருக்கொண்டு சிவபெருமானின் முடியைத் தேடி பிரம்மனும் புறப்பட்டனர். பூமியைத் தோண்டி பாதாளம் ஏழுக்கும் கீழே சென்றும் ஈசனின் அடியைக் கண்டறிய முடியாமல் விஷ்ணு தோல்வியோடு திரும்பி வந்தார்.

அன்னமாய் மாறி ஆகாயத்தில் பறந்து பல ஆண்டுகள் கடந்தும், ஈசனின் முடியை காண இயலாமல் பிரம்மனும் அயர்ந்து போனார். அப்போது ஈசனின் தலையில் இருந்து விழுந்த தாழம்பூ பல ஆயிரம் ஆண்டுகளாக கீழ்நோக்கி வந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட பிரம்மன், தாழம்பூவிடம் ‘நான் சிவபெருமானின் முடியை தரிசித்து விட்டதாக பொய் சொல்’ என்றார்.

தாழம்பூவும் அப்படியே பொய் சாட்சி சொன்னது. அப்போது ஜோதிப் பிழம்பில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான், பொய்யுரைத்த பிரம்மனுக்குச் சாபமும், மகாவிஷ்ணுவுக்கு அனுக்கிரகமும் செய்தார்.

பிரம்மனும், விஷ்ணுவும் சிவபெருமானை தொழுதுநிற்க, ஜோதிப்பிழம்பு அக்னி மலையாய் நின்றது. அக்னிமலையான ஈசனும் உள்ளம் குளிர்ந்தார். அதுகண்ட பிரம்மனும் விஷ்ணுவும், ‘பரம்பொருளே! எங்கள் பொருட்டு இங்கு அக்னி மலையாய் ஆகி குளிர்ந்து உள்ளீர்கள். இந்த அண்டத்திலேயே மிகவும் பெரிய சுயம்பு சிவலிங்கம் இந்த அக்னி அண்ணாமலை தான். உமக்கு பூச்சொரிய அண்ணாமலையில் வளரும் மரங்களால் தான் முடியும். உமக்கு அபிஷேகம் செய்விக்க மழை மேகங்களால் தான் முடியும். உமக்கு ஆரத்தி எடுக்க சூரிய, சந்திரர்களால் தான் முடியும். எனவே கலியுகத்தில் மக்களும் உம்மை தீப, தூப அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டு பயனுறும் பொருட்டு சிறிய வடிவில் குறுகி சிவலிங்கமாக காட்சி கொடுக்க வேண்டும்' என்றனர்.

உடனே அண்ணாமலையின் கீழ்புறம் அழகிய சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டது. அந்த சிவலிங்கமே, இன்று நாம் ஆலயத்தில் வழிபடும் அருணாச்சலேஸ்வரர் எனும் அண்ணாமலையார். உடனே தேவதச்சன் அழகிய ஆலயம் எழுப்பினான். பின்னாளில் பற்பல மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டு இன்று ஆறு பிரகாரங்களும், ஒன்பது கோபுரங்களுடனும் பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது திருஅண்ணாமலையார் திருக்கோவில்.

‘அண்ணுதல்' என்றால் ‘நெருங்குதல்’ எனப்பொருள். ‘அண்ணா' என்றால் ‘நெருங்க முடியாதது’ என்று பொருள்படும். அதாவது, மகாவிஷ்ணுவும், பிரம்மனும் ஈசனின் அடியையும் முடியையும் நெருங்க முடியாத திருமலை என்பதால் இத்தலம் ‘திருஅண்ணாமலை’ ஆயிற்று.

திருஅண்ணாமலை கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், கலியுகத்தில் ஞானிகளின் பார்வைக்கு மரகத மலையாகவும், பாமரர்களுக்கு கல் மலையாகவும் காட்சி தருவதாக சொல்லப்படுகிறது.

இந்தத் தலத்தில் இறைவனின் உடலில் இடப்பாகம் பெறுவதற்காக பார்வதிதேவி தவம் செய்தார், அப்படி தவம் செய்ததோடு மட்டுமின்றி, கார்த்திகை பவுர்ணமியும் கிருத்திகை நட்சத்திரமும் இணைந்த நன்னாளில் பிரதோஷ காலத்தில் திருவண்ணாமலையை கிரிவலம் வந்ததால், அன்னையின் ஆசை நிறைவேறியது. சிவபெருமான் அம்மனுக்கு தன்னுடைய உடலில் சரிபாதியை வழங்கி அருள்பாலித்தார்.

திருவண்ணாமலையை பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி, அனைத்து நாட்களிலும் கிரிவலம் செய்யலாம். அதிலும் குறிப்பாக கிரகண காலங்கள், பிரதோஷம், மாத சிவராத்திரி, கிரகப் பெயர்ச்சி காலங்களில் கிரிவலம் வந்து வழிபடுவது மிகச்சிறப்பாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் வரும் குருப்பெயர்ச்சி நன்னாளில் திருவண்ணாமலையை வலம்வந்து வழிபடுவது தோஷங்களை விலக்கி, அனைவருக்கும் நற்பலன்களை வழங்கும்.

விழுப்புரத்தில் இருந்தும், திண்டிவனத்தில் இருந்தும் சுமார் 63 கிலோமீட்டர் தூரத்தில் திருவண்ணாமலை அமைந்துள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

தேய்பிறை அஷ்டமி - கால பைரவர் விரதம்.!!

பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம்.

சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர். இவர் சிவபெருமான் ஆட்சி செய்யும் இடமாக கருதப்படும் காசியில், சிவ கணங்களுக்கு தலைவராக விளங்குபவர். ஆணவம் கொண்ட பிரம்ம தேவனின் தலையைக் கொய்தவர். முனிவர்களின் சாபத்தில் இருந்து, தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்து அருளியவர். 

மன்மதனின் கர்வம் அடங்கச் செய்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக சூரியனின் மகனான சனியை, சனீஸ்வரனாக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமை சேர்த்தவர். இப்படி பல சிறப்புகளைக் கொண்ட பைரவமூர்த்தியை ‘கால பைரவர், மார்த்தாண்ட பைரவர், சேத்திர பாலகர், சத்ரு சம்கார பைரவர், வடுக பைரவர், சொர்ணாகாசன பைரவர் உள்ளிட்ட பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறார்கள். 

பைரவ மூர்த்தியை பவுர்ணமிக்கு பின் வரும் அஷ்டமியில், அதாவது தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம். பஞ்ச தீபம் என்பது, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசுநெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்ற வேண்டும். ஒரு தீபத்தில் இருந்து மற்றொரு தீபத்தை ஏற்றக்கூடாது. ஒவ்வொரு தீபத்தையும் தனித்தனியாக ஏற்ற வேண்டும். இப்படி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

பைரவர் என்ற பெயருக்கு ‘பயத்தை அளிப்பவர்’ என்று பொருள். அதாவது தன்னை அண்டியவர்களின் குறைகளைக் களைய அவர்களின் எதிரிகளுக்கு பயத்தை அளிப்பவர். ‘பாவத்தை நீக்குபவர்’ மற்றும் ‘அடியார்களின் பயத்தை போக்குபவர்’ என்றும் பொருள் உண்டு.

பைரவர், சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவர் ஆவார். அந்தகாசூரனை அழிப்பதற்காக சிவபெருமான் எடுத்த வடிவமே பைரவர் ஆவார். இவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்கிறார். சிவபெருமானைப் போலவே, பைரவருக்கும் 64 வடிவங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் ‘கால பைரவர்’. 

காலத்தை வென்றவர், கால சக்கரத்தை இயக்குபவர் இந்த கால பைரவர். இவரது உடலில் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும், 9 கோள்களும் அமைந்திருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இவரது மூச்சுக் காற்றில் இருந்து தான் திருவாக்கியம் மற்றும் திருக்கணிதம் ஆகிய பஞ்சாங்கங்கள் உண்டானதாக கூறப்படுகிறது. இவற்றில் இருந்து மற்ற காலக் கணித முறைகள் தோன்றியதாம்.

கால பைரவர் மற்ற பைரவர்களைக் காட்டிலும் உக்கிரமானவர். ஆனால் தன்னை நம்பியவர்களை கண்ணின் இமைபோல் காப்பவர். இவரே சிவ ஆலயங்களின் காவல் தெய்வம். இவரின் அருள் இன்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. சிவவழிபாட்டில் முன்னேற்றம் காண கால பைரவரின் அருள் மிகவும் அவசியம் ஆகும்.

உலகில் பிறந்தவர்கள் வேண்டுவது முக்தியைத் தான். அதாவது மறுபிறவி இல்லாத நிலை. ஆனால் ஒருவருக்கு பாவமோ அல்லது புண்ணியமோ இருந்தால் மறுபிறவி உண்டு. எப்போது பாவம் மற்றும் புண்ணியம் இரண்டும் அழிந்து வெறுமை நிலை உண்டாகின்றதோ அப்போது தான் பிறவி இல்லாத பெருநிலை ஏற்படும். அத்தகைய பிறவி இல்லாத பெருவாழ்வை தருபவர் கால பைரவர். இவர் காலத்தை மாற்றும் சக்தி கொண்டவர் என்பதால், ஒருவரது பாவ- புண்ணியங்களை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.

வீட்டில் தினமும் விளக்கேற்றி வைத்து, ‘ஓம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து வந்தால், வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

முருகனின் அறுபடைவீடு பலன்.!!

முருகனின் அறுபடை வீடுகளில் எந்த திருத்தலத்தில் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

திருப்பரங்குன்றம் - திருமணம் கைகூடும்

திருச்செந்தூர் - கடலில் நீராடி வழிபட்டால் நோய் பகை நீங்கும்

பழனி - தெளிந்த ஞானத்தை வழங்குவார்

சுவாமிமலை - மகிழ்வான சுகவாழ்வு கிட்டும்

திருதணிகை - கோபம் நீங்கி நல்வாழ்வு அமையும்

பழமுதிர்சோலை - பொன், பொருள் சேரும்.

இதுதவிர திருத்தணி முருகனிடம் காதல் திருமணம் நடக்கவும், திருப்பரங்குன்ற முருகனை டாக்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வெற்றிக்காகவும், பழமுதிர்சோலை முருகனை கர்மதோஷம் விலகவும் வழிபடுபவர்களும் ஏராளம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

தேய்பிறை அஷ்டமி: கடன் தீர்க்கும் ஸ்ரீகால பைரவாஷ்டகம்.!!

அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு சிறந்தது என்றாலும், தேய்பிறை அஷ்டமி நாளே, பைரவரை வழிபட மிகவும் உகந்தது. இன்று சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை பார்க்கலாம்.

கால பைரவாஷ்டகம் என்ற சுலோகம், ஸ்ரீஆதிசங்கரர் அருளியது. மிகவும் சக்தி வாந்த இந்த அஷ்டகத்தை சனிக்கிழமைகளில் அல்லது அஷ்டமி நாளில் பாராயணம் செய்ய, பிணிகள் அகலும். வாழ்க்கை வளம் பெருகும். குறிப்பாக, துரத்தும் கடன்கள் விரைவில் அடையும்.

ஸ்ரீகாலபைரவாஷ்டகம் :

தேவராஜ ஸேவ்யமான பாவநாங்க்ரி பங்கஜம்
வ்யால யஜ்ஞஸூத்ர மிந்துஸேகரம் க்ருபாகரம்
நாரதாதி யோகி ப்ருந்த வந்திதம் திகம்பரம்
காஸிகா புராதி நாத கால பைரவம் பஜே॥
பானு கோடி பாஸ்வரம் பவாப்தி தார கம்பரம்
நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோஸனம்
கால காலமம் புஜாக்ஷ மஸ்த ஸூல மக்ஷரம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
ஸூல டங்க பாஸ தண்ட பாணி மாதி காரணம்
ஸ்யாம காய மாதி தேவ மக்ஷரம் நிராமயம்
பீம விக்ர மம் ப்ரபும் விஸித்ர தாண்டவ ப்ரியம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
புக்தி முக்தி தாயகம் ப்ரஸஸ்த சாரு விக்ரஹம்
பக்த வத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்த லோக விக்ரஹம்
நிக்வணத் மனோஜ்ஞ ஹேம கிங்கிணீ லஸத்கடிம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
தர்ம ஸேது பாலகம் த்வதர்ம மார்க்க நாஸகம்
கர்மபாஸ மோசகம் ஸுசர்ம தாயகம் விபும்
ஸ்வர்ண வர்ண கேஸ பாஸ ஸோபிதாங்க
நிர்மலம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
ரத்ன பாதுகா ப்ரபாபி ராம பாத யுக்மகம்
நித்ய மத்வி தீயமிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம்
ம்ருத்யு தர்ப்ப நாஸனம் கரால தம்ஷ்ட்ர பூஷணம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
அட்டஹாஸ பின்ன பத்மஜாண்ட கோஸ ஸந்ததிம்
த்ருஷ்டி பாத நஷ்ட பாப ஜாலமுக்ர ஸாஸனம்
அஷ்ட ஸித்தி தாயகம் கபால மாலி காதரம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
பூத ஸங்க நாயகம் விஸால கீர்த்தி தாயகம்
காஸி வாஸி லோக புண்ய பாப ஸோதகம் விபும்
நீதி மார்க்க கோவிதம் புராதனம் ஜகத் பதிம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
கால பைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்ஞான முக்தி ஸாதனம் விஸித்ர புண்ய வர்த்தனம்
ஸோக மோஹ லோப தைன்ய கோப தாப
நாஸனம்
தே ப்ரயாந்தி கால பைரவாங்க்ரி ஸந்நிதிம்
த்ருவம்॥...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சிவபெருமானின் சில அவதாரங்கள்.!!

சிவபெருமான் சில அவதாரங்களை எடுத்திருக்கிறார் என்பதை பலரும் அறிந்திருப்பார்களா என்பது தெரியவில்லை. சிவபெருமான் எடுத்த சில அவதாரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

சிவபெருமானுக்கு 64 வடிவங்கள் இருப்பதை அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் கிருஷ்ண பகவான் எடுத்ததைப் போல, சிவபெருமானும் கூட சில அவதாரங்களை எடுத்திருக்கிறார் என்பதை பலரும் அறிந்திருப்பார்களா என்பது தெரியவில்லை. உலக உயிர்களைக் காப்பதற்காக, இறைவன் பூமியில் தோன்றுவதே அவதாரம் எனப்படுகிறது. அப்படி சிவபெருமான் எடுத்த சில அவதாரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

நந்தி அவதாரம்

நந்தி என்று அழைக்கப்படும் பெரிய காளை, சிவபெருமானின் ஒரு அவதாரமாகவே சொல்லப்படுகிறது. நந்தி வழிபாடு என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் உள்ளது. சிவபெருமானே நந்தியாக உருவெடுத்ததாக சில புராணக் கதைகள் சொல்கின்றன. மந்தைகளின் பாதுகாவலனாக, சிவபெருமானின் நந்தி அவதாரம் பார்க்கப்படுகிறது.

ரிஷப அவதாரம்

பாற்கடல் கடையும் நிகழ்வுக்குப் பிறகு, கீழ்லோகத்திற்கு சென்றார் விஷ்ணு பகவான். அங்கே ஒரு அழகிய பெண்ணை பார்த்து மயங்கினார். அங்கே தங்கியிருந்த போது விஷ்ணு பகவானுக்கு பல மகன்கள் பிறந்தனர். ஆனால் அவரின் அனைத்து குழந்தைகளும் அசுரத்தனத்துடன் கொடியவர்களாக இருந்தனர். அவர்கள் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான தொல்லைகளை அளித்து வந்தனர். இதனால் சிவபெருமான் தருமம் என்னும் ரிஷப உருவம் கொண்டு, விஷ்ணு பகவானின் மகன்களை அழித்தார். தன் மகன்களை அழித்த, காளையுடன் சண்டையிட வந்தார் விஷ்ணு. ஆனால் அது சிவபெருமானின் அவதாரம் என்பதை அறிந்ததும், அவர் தன் இருப்பிடத்திற்கு திரும்பினார்.

வீரபத்திர அவதாரம்

தட்சன் நடத்திய யாக சாலையில், தன்னையே மாய்த்துக் கொண்டார் சதி தேவி. இதனால் தட்சன் மீது சிவபெருமானுக்கு கடும் கோபம் உண்டானது. தன் தலையில் இருந்து சிறிய முடியை எடுத்து அதனை தரையில் போட்டார். அதில் இருந்து வீரபத்திரர் மற்றும் ருத்ரகாளி தோன்றினர். சிவபெருமானின் கடுமையான அவதாரமாக வீரபத்திரர் அவதாரம் பார்க்கப்படுகிறது. மூன்று கடுஞ் சின கண்களோடு, எலும்பு கூடு மாலை அணிந்து பயங்கரமான ஆயுதங்களை கொண்டிருப்பவராக இவர் சித்தரிக்கப்படுகிறார். சிவபெருமானின் இந்த அவதாரம், யாகத்தில் தட்சனின் வெட்டுண்ட தலையை கொண்டிருக்கும்.

அஸ்வத்தாமன்

பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட கொடிய விஷத்தை, சிவபெருமான் உட்கொண்டார். அது அவர் உடல் முழுவதும் பரவாமல் இருக்க பார்வதி தேவி, ஈசனின் கழுத்தை அழுத்திப் பிடித்தார். அதனால் விஷம் தொண்டையிலேயே நின்று விட்டது. கழுத்தில் நின்ற விஷத்தால் ஈசனுக்கு எரியத் தொடங்கியது. அந்த எரியும் தன்மை ஒரு உருவம் பெற்று வெளிவந்தது. அந்த உருவத்திற்கு ஒரு வரமும் கொடுத்தார் ஈசன். ‘பூமியில் துரோணனின் மகனாகப் பிறந்து அனைத்து சத்ரியர்களையும் கொல்வான்’ என்பதே அந்த வரம். அந்த உருவ அவதாரமே ‘அஸ்வத்தாமன்’ ஆகும்.

கீரத் அவதாரம்

ஒரு முறை அர்ச்சுனன் தவத்தில் இருந்த போது, கீரத் (வேட்டைக்காரன்) உருவம் எடுத்தார் சிவபெருமான். அந்த நேரத்தில் அர்ச்சுனனைக் கொல்ல, ‘மூக்கா’ என்ற அசுரனை அனுப்பி இருந்தான், துரியோதனன். அந்த அசுரன் தன்னை ஒரு காட்டுப் பன்றியாக உருமாற்றிக்கொண்டு அர்ச்சுனனைக் கொல்ல வந்தான்.

ஆழ்ந்த தியானத்தில் இருந்த அர்ச்சுனனின் கவனம், காட்டுப் பன்றியின் சத்தத்தால் சிதறியது. அர்ச்சுனன் கண்ணைத் திறந்து மூக்காவை பார்த்தான். அதன் மீது அம்பு எய்தான். அப்போது மற்றொரு அம்பும் அதன் மீது தைத்தது. அது வேட்டைக்காரன் உருவத்தில் இருந்து சிவபெருமான் எய்த அம்பு ஆகும். யார் முதலில் காட்டுப் பன்றியை வீழ்த்தியது என்ற சர்ச்சை இருவருக்கும் உருவானது. அர்ச்சுனனின் வீரத்தைக் கண்ட சிவபெருமான் அவனுக்கு, பாசுபத அஸ்திரத்தை வழங்கினார்.

யாதிநாத் அவதாரம்

ஒரு முறை ஆஹூக் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவன் இருந்தான். அவனும் அவனது மனைவியும் தீவிர சிவ பக்தர்கள். அந்த தம்பதியை, யாதிநாத் அவதாரம் எடுத்து சந்தித்தார் சிவபெருமான். ஆஹூக் தங்கியிருந்த குடிசை இரண்டு பேர் மட்டுமே இருக்கக்கூடிய சிறிய அளவிலானது. எனவே கணவனும் மனைவியும் வெளியே படுத்துக் கொண்டு, தன் வீட்டிற்கு விருந்தினராக வந்த யாதிநாத்தை வீட்டிற்குள் தங்க வைத்தனர். அன்று இரவு துரதிர்ஷ்டவசமாக வன விலங்கால், ஆஹூக் கொல்லப்பட்டான். அதனால் அவனது மனைவியும் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முன் வந்தாள். அப்போது தனது ரூபத்தை வெளிக்காட்டிய சிவபெருமான் அவருக்கு ஒரு வரம் அளித்தார். அதன் படி அவர்கள் இருவரும் நளன், தமயந்தியாக பிறந்தனர்.

பைரவ அவதாரம்

ஆதி காலத்தில் சிவபெருமானைப் போலவே பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. இதனால் பிரம்மன், தன்னையும் ஈசனுக்கு நிகராக எண்ணி ஆணவம் கொண்டார். இதை அறிந்த சிவபெருமான் எடுத்த அவதாரமே ‘பைரவர் அவதாரம்’ ஆகும். பைரவராக தோன்றிய சிவபெருமான், பிரம்மனின் ஐந்தாவது தலையை துண்டித்தார். துண்டித்த பிரம்மனின் தலையை பார்த்த போது, ஒரு பிராமணனை கொன்ற குற்ற உணர்வு சிவபெருமானுக்கு ஏற்பட்டது. அதனால் 12 வருடத்திற்கு பிட்சாடனராக, பிரம்மனின் மண்டை ஓட்டை சுமந்து சுற்றி திரிய வேண்டிய நிலை அவருக்கு உருவானது. பைரவர் வடிவத்தில்தான், அனைத்து சக்தி பீடத்தையும் சிவபெருமான் காத்து வருவதாக நம்பப்படுகிறது.

பிப்லாட் அவதாரம்

இந்த அவதார வழிபாடு வடநாட்டில் மட்டுமே வழக்கத்தில் உள்ளது. தாதிச்சி என்ற துறவியின் வீட்டில் மகனாக பிறந்தார் சிவபெருமான். அவருக்கு பிப்லாட் என்று பெயரிட்டனர். பிப்லாட் பிறப்பதற்கு முன்பாகவே தாதிச்சி வீட்டை விட்டு சென்று விட்டார். சனி திசையின் காரணமாகவே தனது தந்தை வீட்டை விட்டு வெளியேறினார் என்பதை வளரும்போது பிப்லாட் தெரிந்து கொண்டார். இதனால் சனி பகவானை சபித்தார். அந்த சாபத்தால், விண்ணில் இருந்து மண்ணில் விழுந்தார் சனி பகவான். பின்னர் 16 வயது ஆவதற்கு முன்பாக யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு, சனியின் சாபத்தை போக்கினார் பிப்லாட். எனவே இவரை வழிபட்டால் சனியின் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

Monday, 1 October 2018

குழந்தை வரம் தரும் மழலை முனீஸ்வரன்.!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வந்தவாசி சாலையில் உள்ள நல்லாளம் கிராமத்தில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மழலை முனீஸ்வரன் கோயில் உள்ளது. இங்கு காளிகாம்பாள் உடன் மழலை முனீஸ்வரன் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் நல்லாளம் கிராமத்தில் தூளியில் இருக்கும் சிறு குழந்தைகள் அடிக்கடி காணாமல் போகும். குழந்தையின் பெற்றோர் தேடி திரியும்போது கோயில் அருகே உள்ள மரத்தின்மீது குழந்தை அழும் சத்தம் கேட்கும். பிறகு பெற்றோர்கள் கையேந்தி வணங்கி தன் பிள்ளையை பெற்று செல்வார்கள். இச்சம்பவம் அந்த கிராமத்தில் அடிக்கடி நடைபெறுகிறது.  ஒரு நாள் அதே கிராமத்தை சேர்ந்த காமாட்சி என்ற பெண் அவ்வழியாக ஆடுகளை ஓட்டி செல்லும்போது முட்புதரில் இருந்து அசரீரி ஒலி கேட்டது. ‘‘காமாட்சி, நான் மழலை முனீஸ்வரன். 

நான் இங்கு முட்புதரில் உள்ளேன், என்னை மீட்டு எனக்கு இங்கே ஒரு கோயில் கட்டு’’ என கேட்டுள்ளது. உடனே ஊருக்கு சென்ற காமாட்சி ஊர் மக்களை அழைத்து வந்து முட்புதர்களை சுத்தம் செய்தபோது 4 அடி உயர பீடத்தின் மீது சுயம்புவாக மழலை முனீஸ்வரன், காளிகாம்பாள் மற்றும் நாகலிங்கம் சிலைகள் இருந்தது. இதையடுத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கோயில் கட்டினர். மழலை முனீஸ்வரன் பார்வதி தேவிக்கும், சிவபெருமானுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிவபெருமான் கோபித்து கொண்டு சுடுகாட்டு வழியாக செல்கிறார். 

அப்போது தனது காலில் இறந்துபோன அழகான குழந்தைகளின் சடலம் தட்டுப்பட்டது. அந்த குழந்தைகளை கையில் தூக்கி பார்த்து கண்கலங்கிய சிவபெருமான், இந்த சின்னஞ்சிறிய மழலைச்செல்வங்களுக்கு இப்படி ஒரு கதியா என்று மனம் வருந்தினார். இனிமேல் இந்த மழலைச் செல்வங்கள் மட்டும் என்னால் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாகும் குழந்தைகளின் முதல் தலைமுடியை காணிக்கையாக செலுத்த வேண்டும் என்று அருளினார். அன்று முதல் இன்று வரை குழந்தைகளின் தலைமுடி காணிக்கை செலுத்தும் முறை  நடந்து கொண்டு இருக்கிறது. 

குழந்தை பாக்கியம்

இக்கோயிலுக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலம் பக்தர்கள் தம்பதிகளாக வந்து குழந்தை வரம் வேண்டிகொள்கின்றனர். பின்னர் பிரார்த்தனைகள் நிறைவேறியதும் ஆடி மற்றும் தை மாதங்களில் கோயிலுக்கு வந்து சுவாமி, அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து குழந்தைகளுக்கு முடிகாணிக்கை செலுத்தி, காது குத்தி, அன்னதானம் செய்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த வரவில்லை என்றால் அவர்களுக்கு நினைவுப்படுத்த குழந்தைகளின் முடிகளை சடைமுடியாக மாற்றி விடுவார் என்பது இத்தலத்தில் ஐதீகம்.

மண் குதிரையில் வலம்

மண் குதிரையில் முனீஸ்வரன் இரவு நேரத்தில் ஊரை சுற்றி வலம் வந்து காப்பதாகவும் ஊரில் இதுவரை எந்த ஒரு திருட்டு சம்பவமும் நடந்தது இல்லை என்று முனீஸ்வரனை கிராம மக்கள் போற்றுகின்றனர்.

காளிகாம்பாள்

இங்கு அம்மன் சுயம்புவாக கிழக்கு பார்த்த வண்ணம் கருணை பொங்கும் விழியுடன், பெண்களின் திருமாங்கல்யத்தை காப்பவராக காட்சி தருகிறார்.  இஷ்ட தேவதைகள் வாமுனீ, கரிமுனீ, மச்சமுனீ, ஜடாமுனீ, சட்டமுனீ, எல்லையை காக்கும் யோகமுனீ, லாடமுனீ, தவமுனீ, ஜெயமுனீ, செம்முனீ, ஆகிய பிரமாண்ட சிலைகள் உள்ளன. முனீஸ்வரரை வணங்கினால் திருமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. மேலும் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பதும் தீராத நோய்கள் தீரும் என்பது இத்தலத்தின் சிறப்பு. காளிகாம்பாள் சிவனின் அம்சமாக விளங்குவதால் இங்கு விபூதியே பிரசாதமாக பக்தர்களுக்கு தரப்படுகிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡