Wednesday, 31 October 2018

எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பும் கணபதியை வேண்டி வழிபாடு செய்த பின்னர் தொடங்குவது வெற்றியை தரும்.!!

கணபதியின் அருளை பெறுவதற்காக விரதங்களை பார்க்கலாம்.


1. வைகாசி வளர்பிறை:
 
முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வருடம் செய்வது வெள்ளிக்கிழமை விரதம்.
 
2. செவ்வாய் விரதம்:
 
ஆடிச் செவ்வாய் தொடங்கி ஒவ்வொரு செவ்வாயும் ஓராண்டு வரை செய்வது செவ்வாய் தோஷம் விலகிவிடும்.
 
3. சதுர்த்தி விரதம்:
 
பிரதி மாதம் சதுர்த்தி அன்று இருப்பது காரியத்தடைகள் நீங்கும்.
 
4. குமாரசஷ்டி விரதம்:
 
கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை திதி அன்று தொடங்கி மார்கழிவரை பிறை சஷ்டி வரை 21 தினங்கள் செய்வர். 21 இழைகள் உடைய மஞ்சள் நூலை கையில் கட்டிக்கொள்வர். பிள்ளை செல்வம் குடும்ப வளத்திற்காக செய்யப்படுகின்ற இந்த விரத்திற்குப் பிள்ளையார் நோன்பு என்ற பெயர் உண்டு.
 
5. தூர்வா கணபதி விரதம்:
 
கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி செய்வது வம்சவிருத்தி ஏற்படும்.
 
6. சித்தி விநாயக விரதம்:
 
புரட்டாசி வளர்பிறை 14-ம் திதியான சதுர்தகி திதியில் விரதம் இருப்பது எதிரிகள் விலகுவர்.
 
7. தூர்வாஷ்டமி விரதம்:
 
புரட்டாசி வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி விநாயகரை 1 ஆண்டு அருகம்புல்லால் அர்ச்சித்து வருவது உடல் வலிமை உண்டாகும்.
 
8. விநாயக நவராத்திரி:
 
ஆவணி வளர்பிறை சதுர்த்தியை தொடர்ந்து ஒன்பது நாட்கள் செய்வது விநாயக நவராத்திரி.
 
9. வெள்ளிப்பிள்ளையார் விரதம்:
 
ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை நேர்ந்து கொண்டு விரதம் இருந்து நாம் கோருகின்ற பலனுக்கு ஏற்ப துதிகள் பாடி பலகார பட்சனங்கள் படைத்து வணங்குதல். இந்த விரத பூஜையை பெண்கள் செய்ய வேண்டும். எண்ணங்கள் நிறைவேறும் படி செய்வது.
 
10. செவ்வாய் பிள்ளையார் விரதம்:
 
ஆடி மாத செவ்வாயன்று செய்யப்படுவது. ஆண்கள் கலந்து கொள்ளக்கூடாது. இந்த விரத பூஜையைச் செய்யும் பெண்கள் வீட்டிலிருந்து பச்சரிசியைக்கொண்டு வந்து பொது இடத்தில் இடித்து மாவாக்கி தேங்காய் துருவல் சேர்த்து உப்பின்றி கொழுக்கட்டை அடை செய்து விநாயகருக்கு படைப்பர். கன்று போடாத பசு சாணத்தால் உருவம் செய்து புங்கமரக்கொழுந்து, புளிய மரக்கொழுந்தால் தட்டி செய்து மேடையாக்கி அதில் அவரை பிரதிஷ்டை செய்து ஆடிப்பாடுவர்.
 
11. அங்காரக சதுர்த்தி விரதபூஜை:
 
பரத்வாஜ முனிவருக்கும், இந்திர லோகப்பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க அதை பூமாதேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைக்க மகரிஷியோ அதற்கு அங்காரகன் எனப்பெயர் சூட்டி விநாயகரை பூஜித்து வரும்படி கூறினார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக்கிரஹகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார். ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை செவ்வாயில் தொடங்கி ஒரு வருடம் பூஜை செய்து வந்தால் பெரும் பணக்காரன் ஆவான் என்று விநாயகர் வழிபாட்டு சாத்திரங்கள் சொல்கின்றன...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

மரகத லிங்கத்தை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்.!!

புதனுக்கு உரிய மரகதத்தை லிங்கவடிவில் வழிபடுவது மிக சிறந்தபலனை அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

மரகத கல்லை லிங்கமாக செய்து வழிபடலாம். புதனுக்கு உரிய மரகதத்தை லிங்கவடிவில் வழிபடுவது மிக சிறந்தபலனை அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு மரகதலிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது முன்னோர் வாக்கு.

நவகிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. எனவே, மரகத லிங்கத்தை வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தை, கேட்டவுடன் பெற முடியும் என சில ஆன்மிக நூல்களில் கூறப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷ்ன சக்தி உண்டு. அந்த வகையில் புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தைப் பெறலாம்.

கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகத லிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது. இதுமட்டுமின்றி வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும், சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும்.

மரகதலிங்கத்தை வணங்குவதால் கல்வி, பதவி, போன்றவற்றில் சிறந்து விளங்கலாம். சகல தோஷங்களும் இவ்வழிபாட்டினால் நீங்கும். மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது.

அரிய வகை மரகத லிங்கங்கள், மாணிக்க லிங்கங்கள், கருநீல லிங்கங்கள், கனக புஷ்பராக லிங்கங்கள் என பலவகை லிங்கங்கள் உள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயம்.!!

1200 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ஆதிசங்கரர் சிருங்கேரியில் அம்பாளை எழுந்தருளச் செய்த சமயம், அம்பாளுக்கு சந்தனத்தாலான விக்ரகத்தை செய்து வைத்தார்.

1200 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ஆதிசங்கரர் சிருங்கேரியில் அம்பாளை எழுந்தருளச் செய்த சமயம், அம்பாளுக்கு சந்தனத்தாலான விக்ரகத்தை செய்து வைத்தார். பிறகு பனிரெண்டாவது குருவான ஸ்ரீ வித்யாரண்ய மகாசுவாமிகள் கேரள ஆலயங்களைப் போன்று ஓடுகளால் வேயப்பட்ட மேல் தளத்தை உடைய மூங்கில்களாலான ஆலயத்தை நிர்மாணித்து, பல நூற்றுக்கணக்கான வருடங்களாக அபிஷேகம் முதலியவைகளால் ஆராதிக்கப்பட்டு வந்ததால் சிதிலமாகத் தொடங்கியிருந்த சந்தன விக்ரகத்திற்கு பதிலாக தற்போதுள்ள தங்கத்தாலான விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார்.

33-ம் குருவான ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதீ மகாசுவாமிகள், மெருகூட்டப்பட்ட கருங்கற்களாலான மதிற்சுவர் களைக் கொண்ட, தற்போது காணப்படும் ஆலயத்தை உருவாக்கினார். 35-ம் குருவான ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகாசுவாமிகள் ஆலயத்திற்கு மேலும் பல திருப்பணிகளைச் செய்தார்.

தற்போதைய குருவான ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாசுவாமிகள் அம்பாளின் மூலஸ்தானத்திற்கு தங்கத்தாலான நிலைப் படியையும், கதவுகளையும் உருவாக்கியதுடன் அம்பாளுக்கென்று தங்கத்தேர் ஒன்றையும் அர்ப்பணித்திருக்கிறார். ஆலயத்தினுள் இருக்கும் நவரங்க மகாமண்டபம் மிகத் தேர்ச்சியான சிற்பவேலைப்பாடுகளுடன் கூடிய பற்பல தூண்களைக் கொண்டது. இத்தூண்களில் துர்கா, ராஜராஜேஸ்வரி முதலான கடவுள்களின் பிம்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சர்வ அலங்காரங்களுடன் இங்கு வீற்றிருக்கும் ஸ்ரீ சாரதாம்பாளைக் காண கண்கோடி வேண்டும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சிருங்கேரி கோவில் பற்றிய 50 வழிபாட்டு தகவல்கள்.!!

சிருங்கேரி பெங்களூரில் இருந்து 336 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த திருத்தலம் பற்றிய 50 வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

1. இந்தியாவின் சமய வரலாற்றில் முக்கியமான இடத்தை பெற்றிருப்பது சாரதா பீடமாகும். 

2. துங்கபத்ரா நதியின் கரையில் பசுமை போர்த்திய குன்றுகளின் மேல் ஆதிசங்கரர் நடந்து போய் பீடத்தையும் சாரதாம்பாள் ஆலயத்தையும் அமைத்ததாக வரலாறு கூறுகிறது.

3. ஆதிசங்கரர் தொகுத்த அத்வைத வேதாந்தம் இன்றும் உயிர்ப்புடன் திகழும் உருவமாக சாரதா பீடம் இருக்கிறது.

4. சிருங்கேரி பெங்களூரில் இருந்து 336 கி.மீ. தொலை வில் அமைந்துள்ளது. மங்களூர், ஷிமோகாவில் இருந்தும் சிருங்கேரிக்குச் சென்று வரலாம்.

5. ஸ்ரீ சாரதாதேவி மடத்திலேயே குறைந்த வாடகையில், அங்கு செல்லும் பக்தர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்கின்றன.

6. கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் அன்னை சாரதா தேவிக்கு உற்சவர் சிலை உள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அன்னை சாரதா தேவியின் உற்சவ சிலை ஊர்வலமாக, வெள்ளி ரதத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது.

7. சிருங்கேரி செல்பவர்கள், இங்கிருந்து 22 கி.மீ. தொலைவிலும், கிக்கா என்ற இடத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள ஸ்ரீமனே நீர் வீர்ச்சியை கண்டு களித்து வரலாம். இந்த நீர் வீழ்ச்சி, கர்நாடக மாநிலத்தின் மேற்கு மலைத் தொடர்ச்சியில் அமைந்துள்ள மிக அழகிய நீர் வீழ்ச்சியாகும்.

8. யாத்திரையின் கடைசியில் காஞ்சியை அடைந்த ஸ்ரீசங்கரர் தன்னிடம் வைத்துக் கொண்ட யோகலிங்கத்தை அங்கே வைத்து “காமகோடி” பீடத்தை ஸ்தாபித்ததாக சொல்வார்கள். மற்ற லிங்கங்களான மோட்சலிங்கம், ஸ்ரீசிதம்பரத்திலும், முக்தி லிங்கம் ஸ்ரீபத்ரிநாத்திலும், வர லிங்கம் நேபாளத்தில் உள்ள நீலகண்ட சேத்திரத்திலும் போக லிங்கம் ஸ்ரீசாரதா பீடத்திலும் ஸ்தாபிக்கப்பட்டன. 

9. சாரதை கோவில் நுழைவு வாயிலில் இருந்தே தரிசனம் செய்யும்படி அமைக்கப்பட்டு இருக்கிறது. சாரதை கல்விக்கு அதிபதி என்பதால் அங்கு வந்து அட்சராப்பியாசம் செய்து கொண்டு போகின்றனர்.

10. சதா நேரமும், அங்கு சகஸ்ர நாம அர்ச்சனை நடந்து கொண்டே இருக்கிறது. இடைவிடாத பூஜை, நாம் எப்போது வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். நைவேத்தியப் பிரசாதத்துடன் சகஸ்ரநாம அர்ச்சனைக்கு பணம் கட்டினால் பிரசாதம் என்று பெரிய அளவில் தேங்காய் பர்பி தருகிறார்கள்.

11. குரு பரம்பரையை வெளிப்படுத்தும் விதமாகவே எட்டாம் நூற்றாண்டு முதல் இன்றளவும் சிருங்கேரி மட குருமார்கள் தமது பட்டப் பெயரில் ‘பாரதி தீர்த்த’ எனும் பட்டத்தை சூட்டிக் கொள்வது வழக்கமாக உள்ளது.

12. சிருங்கேரி மடத்தில் உலகிலேயே மிகப்பெரிய வீணை உள்ளது. இந்த வீணைக்கு சார்வபவும வீணை என்று பெயர். தமிழ்நாட்டில் தயாரான இந்த வீணை கடந்த 2003-ம் ஆண்டு சிருங்கேரி மடத்துக்கு வழங்கப்பட்டது. 10 அடி நீளம், 76 செ.மீ. அகலம், 74 செ.மீ. உயரமுடைய இந்த வீணை சுமார் 70 கிலோ எடை கொண்டது.

13. நாட்டிய சாஸ்திரத்தில் வரக்கூடிய ஒன்பது விதமான ரசங்களில் ஒரு ரசத்துக்குப் பேர் சிருங்காரம். சிருங்காரம் என்றால் அழகு என்று அர்த்தம் வரும். சிங்காரி அம்பாளை செல்லமா நாம சொல்லும் வார்த்தை கூட இந்த சிருங்காரத்தில் இருந்து வந்த ரீங்காரம்தான் சிருங்கம் + கிரி = சிருங்கேரி.

14. சிருங்கேரியில் உள்ள சாரதா தேவியானவள் ‘பிரம்ம வித்யா’ சொரூபமாக அதாவது பிரம்ம, விஷ்ணு, சிவன் மற்றும் சக்தி சொரூபங்களாகிய சரஸ்வதி, லட்சுமி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே சொரூபமாக ஸ்ரீ சக்கரத்தின் மேல் சிம்மாசனத்தில் அமர்ந்து வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் தருகிறாள்.

15. அறிவுக்கும் கல்விக்கும் கடவுளான சாராதாம் பாவுக்காக நிர்மானிக்கப்பட்டுள்ள இந்த தட்சணாம்னய பீடம் ஆச்சார்யர் ஸ்ரீ சங்கர பகவத்பாதரால் 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் 14-ம் நூற்றாண்டில் சந்தன மரத்தால் இருந்த பழைய சிலை புதுப்பிக்கப்பட்டு தங்கம் மற்றும் கல்லால் உருவாக்கப்பட்டதாகவும் நம்பிக்கைகள் நிலவுகின்றன.

16. சிவனால் சங்கராச்சாரியாருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் லிங்கம் ஒன்றும் இங்கு உள்ளது.

17. யசூர் வேதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இம்மடம் அமைந்துள்ளது.

18. கோவில் கட்டிடம் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை மரத்தால் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் எதிர்பாராமல் ஏற்பட்ட ஒரு தீ விபத்தின் காரணத்தால், தென் இந்திய இந்து கலாச்சார கட்டிடக்கலைப்படி இப்போதைய கோவில் கட்டப்பட்டுள்ளது.

19. அஷ்டலட்சுமி ஓவியம் மற்றும் தங்கம் பதிக்கப்பட்ட எட்டு கதவுகளும் இங்கு உள்ளன. இங்குள்ள சிற்பங்கள் யாவும் தமிழ்நாட்டு சிற்பக் கலையினை பிரதிபலிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன.

20. நவராத்திரி மற்றும் சித்ரா சுக்ல பூர்ணிமா சிறப்பு பூஜை இரண்டும் இந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

21. உள்ளூர் மக்கள் தீபோத்சவம், கார்த்திகா பூர்ணிமா, லலிதா பஞ்சமி, சாரதா ரதோத்சவம் போன்ற வற்றை இந்த புனித தலத்தில் கொண்டாடுகின்றனர்.

22. ஸ்ரீ சிருங்கேரி சாரதா மடத்தினுள் ஸ்ரீ ரத்னகர்ப்ப கணபதி, ஸ்ரீ சாரதாம்பாள், ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் ஆகிய மூன்று சன்னதிகளும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன.

23. நடை திறக்கும் நேரம் :- தினமும் காலை 6 மணி முதல் 2 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும்.

24. அருகிலுள்ள விமான நிலையம்- மங்களூர் 7 கி.மீ., அருகில் உள்ள ரெயில் நிலையம்- சிருங்கேரி 55 கி.மீ.

25. ஆலயத்தில் வெள்ளி மற்றும் தங்க ரதங்கள் இருக்கின்றன. நவராத்திரி முதலிய விசேஷ நாட்களிலும், வெள்ளிக்கிழமைகளிலும் தங்க ரதப் பவனி உண்டு. பக்தர்கள் பணம் கட்டினால் வெள்ளிக்கிழமைகளில் தங்கரத, வெள்ளி ரத சேவை கிடைக்கும்.

26. சிருங்கேரியில் நடக்கும் திருவிழாக்களில் முக்கியமானது சங்கர ஜெயந்தி. ஏப்ரல், மே மாதங்களில் வைகாச சுக்ல பஞ்சமியன்று கொண்டாடப்படுகின்றது. 

27. வியாஸ பூஜை, வரலட்சுமி விரதம், கிருஷ்ணாஷ்டமி, விநாயக சதுர்த்தி, வாமன ஜெயந்தி, அனந்தபத்மநாப விரதம், உமா மகேஸ்வர விரதம், சாதாம்பாள் அபிஷேக, ரத சப்தமி ஆகியவை குறிப்பிடும்படியான திருவிழாக்கள்.

28. மகாசிவராத்திரி அன்று இரவு முழுவதும் சந்திர மவுலீசுவரருக்கு சுவாமிஜி பூஜை செய்வார்.

29. ரிஷ்யசிருங்க பர்வதம் ஒரு பச்சைப் பசேல் வனப் பிரதேசம். மருத்துவ குணமுள்ள மூலிகைச் செடிகள். கடுமைமான கோடையில் கூட, ஜிலு ஜிலுவென்று அருமையான சீதோஷ்ண நிலை, மனதிலும் உடலிலும் எப்போதும் ஒரு நிம்மதி நிலவ வைக்கும் சூழல் உள்ளது.

30. இங்குள்ள அத்வைத ஆராய்ச்சி நிலையத்தில் ஏராளமான ஓலைச்சுவடிகள், வேதம், உபநிடதம், சாஸ்திரம், தர்க்கம் முதலான மேன்மையான சமஸ்கிருத நூல்கள் கொண்ட நூலகம் இருக்கிறது. இங்கு வேத பாடசாலை மாணவர்களும் அயல்நாட்டினரும் அமைதியாக அமர்ந்து நூல்களை ஆராய்ந்து குறிப்பு எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

31. குரு நிவாஸ் என்ற பிரம்மாண்ட அழகிய கட்டிடத்தில் ஜகத்குரு சங்கராச்சாரிய பாரதீ தீர்த்த மகா சுவாமிஜி காலை 11 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார்.

32. சிருங்கேரிக் கோவில்களையும் மடத்தையும் நிர்வகிக்கும் சாரதா பீடத்தின் நிர்வாகத்தில் இயங்கும் அருமையான தங்கும் விடுதிகளில் அறைகள் மிகக் குறைவான வாடகையில் கிடைக் கின்றன. வரும் யாத்ரீகர்கள் யார் வேண்டு மானாலும் வரிசையில் நின்று தங்கள் ஊர், பெயரைப் பதிவு செய்து அறைகளை பெற்றுக் கொள்ளலாம்.

33. வெள்ளிக்கிழமை தோறும் விசேஷமாக ஸ்ரீசக்கர பூஜை நடத் தப்படுகிறது. அது அற்புதமான தெய்வீக அனுபவமாக இருக்கும்

34. வித்யா சங்கரர் கோவிலின் அமைப்பு திராவிட, ஹொய்சாள கலைப்பாணிகளின் கலவையாக உள்ளது.

35. கோவில் மண்டபத்திலேயே கூட்டம் கூட்டமாக குழந்தைகளை கைபிடித்து அரிசியில் எழுத வைத்து வித்யாரம்பம் செய்து வைக்கிறார்கள். அன்னை சரஸ்வதியின் சன்னதியில், அறிவுக் கண் திறக்கும் இந்த பாரம்பரிய சடங்கை அனைத்து பக்தர்களும் எளிய முறையில் நடத்திக் கொள்ள வசதி செய்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

36. துங்க பத்ரா நதிப் படித்துறை நீண்ட படிகளுடன் அழகாக இருக்கிறது. அங்கு உட்கார்ந்து கொண்டு நதியில் பெரிய பெரிய மீன்கள் துள்ளி விளையாடுவதையும் கரை அருகில் வந்து மக்கள் வீசும் பொரியை விழுங்குவதையும் நாள் முழுக்க அலுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

37. படித்துறையில் மீன் கூட்டங்கள் வருவதனால் நீராட முடியாது. பாலத்திற்கு மறுபுறம் நதி வளைந்தோடும் இடத்தில் குளிக்கலாம்.

38. சிருங்கேரியில் மூவாயிரம் பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய நேர்த்தியான, சுத்தமான, காற்றோட்டமுள்ள உணவுக் கூடம் இருக்கிறது. சுடச்சுட சாதம், பூசணிக்காய், கத்தரிக்காய் என கலந்து கட்டிய சாம்பார், ரசம், ஒரு பாயசம், இனிப்பு, மோர் என்று எளிய உணவுதான். 

39. சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தங்க கோபுர கலச கும்பாபிஷேகம் நடைபெற்றது. கர்ப்பகிரகத்தின் விமானத்தில் அமைந்த தங்க கலசங்களுக்கு, பாரதி தீர்த்த சன்னிதானம் மற்றும் சன்னிதானம் விதுசேகர பாரதி அபிஷேகம் செய்தனர்.

40. சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நரசிம்ம பாரதி சுமார் 1900-ல் நெல்லை மாவட்டம் கோடகநல்லூருக்கு விஜயம் செய்த சமயம் இந்த ஊரை “தட்சண சிருங்கோ” என்று வர்ணித் தார். இங்கு உள்ள சங்கரமடம் முதன் முதலில் கட்டப்பட்ட கிளைகளில் ஒன்றும், மிகவும் பழமையானதும் ஆகும். 

41. சிருங்கேரியில் தங்கம், வெள்ளி தேர்கள் உள்ளன.

42. பெருமாள் வராக உருகக் கொண்டு கடலுக்குள் புகுந்து தன் இரு கொம்புகளால் பூலோகத்தை மீட்டு தூக்கி நிறுத்திய போது அவரது இரு கொம்புகளும்-சிருங்கம் பதிந்த புண்ணிய பூமி அதனால் சிருங்கேரி எனப்பெயர் பெற்றது.

43. துங்கா நதியினால் புனிதமானதாகிய சிருங்ககிரி பல மகான்களின் இருப்பிடமாக விளங்குகிறது. வேத சாஸ்திரங்களைக் குறைவறக்கற்ற எண்ணற்றோர், சிருங்க கிரியில் சங்கரரின் அருகாமையில் இருந்து சாஸ்திர ஞானம் பெற்றார்கள்.

44. ஸ்ரீசுரேஸ்வரர், ஸ்ரீபத்மபாதர், ஸ்ரீ கஸ்தாமலகர், ஸ்ரீதோடகர் ஆகிய நான்கு சீடர்களுடன் பன்னிரண்டு ஆண்டுகள் ஸ்ரீசங்கரர், சிருங்கேரியில் வாசம் புரிந்தார்.

45. சிருங்ககிரி காசி தலத்திற்கு நிகரானது.

46. கங்கா ஸ்நானம், துங்கா பானம் என்பது தொன்மை யான பழமொழியாகும்.

47. சிருங்கேரி மடத்துக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர். ஆண்டுக்கு ஒருதடவையாவது சிருங்கேரிக்கு சென்று வழிபடுவதை அவர்கள் முதன்மை கடமையாக வைத்துள்ளனர்.

48. சிருங்கேரி சாரதா பீடத்தின் 36-வது பீடாதிபதியான பாரதி தீர்த்த சுவாமிகளின் பூர்வாச்சிரமப் பெயர் சீதாராம ஆஞ்சநேயலு. இவருடைய தாய்மொழி தெலுங்கு. ஆனால் கன்னடம், தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய எல்லா மொழிகளிலும் பேசுவார்.

49. தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சீபுரம், திருப்பூர், மேல்மங்கலம், பெரியகுளம், கோவை, கல்லிடைகுறிச்சி, பத்தமடை, வத்தலகுண்டு, நாகர்கோவில், கரூர் ஆகிய 11 ஊர்களில் சிருங்கேரி சாரதா மடத்துக்கு கிளைகள் உள்ளன.

50. சாரதாதேவியின் கிருபையால் தர்மநெறி ஆன்ம நெறி பாரதம் முழுவதும் புத்துயிர் பெற்று உலகத்திற்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்பதே சிருங்கேரி சாரதா பீடத்தின் லட்சியமாகும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

தெய்வீகத் திருத்தலம் சிருங்கேரி.!!

கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் காண்போர் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அபாரமானதோர் இயற்கைச் சூழலில் அமைந்துள்ள தெய்வீகத் திருத்தலமே சிருங்கேரி.

கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் காண்போர் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அபாரமானதோர் இயற்கைச் சூழலில் அமைந்துள்ள தெய்வீகத் திருத்தலமே சிருங்கேரி. 1200 வருடங்களுக்கு முன் ஸ்ரீ ஆதிசங்கரரால் பாரத திருநாட்டின் நான்கு பகுதிகளில் தோற்றுவிக்கப்பட்ட பீடங்களுள் தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம் முதன்மையானதாகும்.

ஸ்ரீசங்கரரையே முதல் குருவாக கொண்டு தொடங்கிய ஸ்ரீசாரதா பீடத்தின் குருபரம்பரை அவருக்குப் பிறகும் இணையற்ற ஜீவன்முக்தர்களால் அலங்கரிக்கப்பட்டு வாழையடி வாழையாக இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

தற்போது இந்த பீத்தின் 36-வது ஜகத்குரு சங்கராசார்யராக ஸ்ரீபாரதீ தீர்த்த மகாசுவாமிகள் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்கள். அளவிடமுடியா ஆன்மீக சாதனைகளைப் படைத்தவரும், கருணைக்கடலும் உலகம் போற்றும் பண்டிதருமான ஆசார்ய சுவாமிகளை நாடி அவரது ஆசிகளை பெற்றுச் செல்வதற்காகவும் மற்றும் சாரதா பீடத்து திவ்விய ஆலயங்களில் தெய்வ தரிசனம் செய்து அளவற்ற ஆனந்தத்தை அடைவதற்காகவும் நாடெங்கிலும் இருந்து நாள்தோறும் எண்ணற்ற ஆஸ்திக பெருமக்கள் சிருங்கேரிக்கு செல்கின்றனர்.

இத்தலத்தைக் கண்டதும் உள்ளத்தைப் பறிகொடுக்காதவர் எவருமிலர் என்றே கூறலாம். இயற்கை பேரெழிலும் தெய்வீகச் சூழலும் நிரம்பப்பெற்ற இத்தலம், தன்னிடத்தே இறையுணர்வுடன் வருவோருக்கு இக பர சுகங்களை மட்டுமல்லாது பிறவிப்பிணியை நீக்கிட உதவும் ஆத்ம ஞானத்தையும் தரவல்லது.

இத்தலம் ராமாயணக்காலத்திற்கும் முற்பட்டதாகும். அக்கால கட்டத்தில் விபாண்டகர் எனும் பெரும் தவ வலிமை பூண்ட முனிவர் இப்பிரதேசத்தில் வசித்து வந்தார். அவர் ஒரு நாள் கானகத்தின் வழியாக சென்று கொண்டிருக்கும்போது அங்கே ஓர் அழகிய ஆண் குழந்தை கேட்பாரின்றி கிடப்பதை கண்டார்.

அதன்மேல் பரிவு கொண்ட அவர் அக்குழந்தையை தன்னுடன் எடுத்து வந்து விட்டார். தெய்வீக ஒளியுடன் விளங்கிய அக்குழந்தையின் தலையில் ஒரு சிறிய கொம்பு போன்ற வளர்ச்சி இருப்பதை கண்ட விபாண்டகர் அக்குழந்தைக்கு ‘ரிஷ்ய சிருங்கர்’ எனப்பெயர் சூட்டி வளர்த்து வரலானார். விபாண்டகரின் நேரடி கண்காணிப்பில் வேத சாஸ்திர கல்வியைக் கற்று தவ வன்மையுடன் வளர்ந்து வந்த ரிஷ்ய சிருங்கர் பெண்களை கண்டதேயில்லை.

பழங்கள் மற்றும் கிழங்கு வகைகள் போன்ற இயற்கை உணவினை தவிர வேறு உணவுகள் எதையும் அறிந்தாருமில்லை. அவரது பிரம்மசரிய நெறி மிக மிக உயர்ந்து இணையற்று விளங்கியது. அக்காலக் கட்டத்திலேயே அப்பிரதேசத்திற்கு சற்றுத் தொலைவில் இருந்த நாட்டினை ரோமபாதர் எனும் அரசர் ஆண்டு வந்தார். தமது நாட்டில் நீண்ட காலமாகவே மழை பொழியாமல் எங்கும் பெருவறட்சி நிலவுவதை கண்டு மிகவும் கவலை கொண்ட அந்த அரசர் அதுபற்றி தமது மதியூக மந்திரிகளிடம் ஆலோசனை செய்தார்.

அவர்கள் அவருக்கு ரிஷ்ய சிருங்கரைப் பற்றி எடுத்துரைத்து, இணையற்ற பிரம்மசாரியான அவரது பாதம் அந்நாட்டில் படுமேயானால் உடனடியாக மழை பொழியும் எனக் கூறினர். ரிஷ்ய சிருங்கர் பெண்களை இதுவரை பார்த்திராததால், திறமை கொண்ட பெண்கள் சிலரை அனுப்பி வைத்து அவரது கவனத்தை ஈர்த்து விபாண்டகருக்கு தெரியாவண்ணம் அவரை இந்நாட்டிற்கு அழைத்து வந்து விடலாம் என்றும் ரோமபாதருக்கு அம்மந்திரிகள் ஆலோசனை கூறினர்.

விபாண்டகரின் கோபத்தை கிளறி பெரும் சாபத்தைப் பெறக்கூடிய அபாயம் இருந்தபோதிலும், நாட்டின் நன்மையை முன்னிருத்தி ரோமபாதரும் அதற்குச் சம்மதித்தார். அரசரின் ஆணைப்படி, அழகும் திறமையும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற பெண்கள் சிலர் விபாண்டகர் இல்லாத சமயம் அவரது ஆசிரமத்திற்கு சென்று ரிஷ்ய சிருங்கரைச் சந்தித்தனர். அவர்களை கண்ட அந்த தெய்வீக பிரம்மச்சாரி அவர்களை வேதத்தில் கூறப்படும் மேலுலகவாசிகள் என்றே எண்ணி விட்டார்.

அவர்களிடம் தனக்கு இனம் புரியாததொரு ஈர்ப்பு ஏற்படுவதை உணர்ந்த அவர் அவர்களது அழைப்பையேற்று, தனது தந்தைக்கு தெரியப்படுத்தும் எண்ணமுமின்றி அவர்களுடன் கிளம்பி விட்டார். அவர்களது நாட்டில் ரிஷ்ய சிருங்கரின் பாதம் பட்டதுதான் தாமதம், பெருமழை பெய்யத் தொடங்கி விட்டது.
மக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். அரசரும் தமது மகளையே ரிஷ்ய சிருங்கருக்கு மணமுடித்தும் வைத்து விட்டார்.

இதற்கிடையில் தமது புத்திரரை வஞ்சித்து தமக்குத் தெரியாமல் அவரை அழைத்துச் சென்று விட்ட அரசர் ரோமபாதரின் செயலை தமது ஞானக்கண்ணால் அறிந்து கொண்ட விபாண்டகர், பெரும் சினம் கொண்டவராக ரோமபாதரின் நாட்டை அடைந்தார். ஆயினும் அரசரின் பணிவார்ந்த சொற்களாலும் உபசரிப்பாலும் சினம் தணிந்த விபாண்டகர் நடந்த அனைத்தும் ஈசனின் திருவுளம் என்பதைப் புரிந்து கொண்டவராய் மணமக்களை நெஞ்சார வாழ்த்தி விட்டு கானகத்திற்கே திரும்பி விட்டார்.

கானகத்தில் இருக்கும் ஒரு சிறு குன்றின் மீது அமர்ந்து நீண்ட தவத்தில் ஈடுபட்ட விபாண்டகர் தமது உடலை நீத்து பெரும் ஒளி வடிவில் அக்குன்றிலிருக்கும் சிவலிங்கத்தினுள்ளே ஐக்கியமானார். (சிருங்கேரியில் இன்றும் இக்குன்று உள்ளது. அம்மஹாமுனிவர் ஐக்கியமான லிங்கம் உள்ள ஆலயமே ஸ்ரீமலஹானிகரேசுவரர் ஆலயம் என்ற பெயருடன் விளங்கி வருகிறது).

ரோமபாதரின் நாட்டில் இருந்த ரிஷ்ய சிருங்கரின் மகிமைகளை அறிந்த அண்டைநாட்டு அரசரான தசரத மகாராஜா அவரைத் தமது அயோத்தி நாட்டிற்கு வருகை புரிந்து தமக்கு சத்புத்திரர்கள் பிறக்கும் வகையில் யாகம் ஒன்றை நடத்தி அளித்து ஆசீர்வதிக்கும்படி வேண்டி கேட்டுக் கொண்டார். அதற்கிணங்கி, ரிஷ்ய சிருங்களும் அப்படியே செய்து கொடுத்தார். அதன் விளைவாக ஸ்ரீராமபிரான் முதலான தெய்வீக புத்திரர்கள் தசரதருக்கு கிடைக்கப் பெற்றார்கள். 

சிறிது காலம் சென்றபின் ரிஷ்ய சிங்கருக்கு தனது அருந்தவப் பயனாலும் இறையுளத்தாலும் விரைவிலேயே இல்வாழ்க்கையில் ஈடுபாடு விலகியதால், அவர் தமது குடும்பத்தார் மற்றும் நாட்டு மக்கள் அனைவரையும் ஆசீர்வதித்துவிட்டு கானகம் திரும்பி தியானத்தில் ஈடுபடத் தொடங்கினார். தமது புவியுலக வாழ்நாளின் இறுதியில் தாம் தியானம் செய்த இடத்திலிருந்த சிவலிங்கத்திலேயே ஒன்றி மறைந்தார்.

ஸ்ரீரிஷ்ய சிருங்கர் வாழ்ந்த பிரதேசமே ரிஷ்ய சிங்ககிரி என அழைக்கப்பட்டது. பின்னர் சிருங்ககிரி எனவும், தற்போது சிருங்கேரி எனவும் மருவித் திகழ்கிறது.

என் கண்கள் உன்னைத் தரிசிப்பதிலும் கைகள் உன்னை பூஜை செய்வதிலும் காதுகள் உன் பிரபாவத்தைக் கேட்பதிலும் வாக்கு உன்னை ஸ்தோத்திரம் செய்வதிலும் தலை உன் பாதத்தை வணங்கியதாகவும் எப்போதும் இருக்க வேண்டும். என் மனது உன் தியானத்தில் ஈடுபடட்டும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡